செவ்வாய், 25 நவம்பர், 2014

மரணத்தின் புன்னகை.


சரிந்த
மரமொன்றைச்
சுமந்தபடி கிளைகள்
உங்கள் வாசலண்டை  வரும்!.
மல்லாந்து கிடந்து
துடிக்கின்ற அதன்
வேர்கள்
பற்றுமிடமில்லாது
பரபரக்கின்றன..!

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெடிப்பு றுங்கவிச் சூரியன்.






















கால முண்ட கண்மணிப் பூக்களின்
கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!

வியாழன், 4 செப்டம்பர், 2014

நீ இல்லா வீடு.....














நீ விட்டுவிட்டுப் போன
உன் கிராமத்துத் தெருமுனையில்,
அணைந்து எரிகின்ற
ஒற்றை விளக்கடியில்
குரைத்து,
பின் அடங்கிப்போன 
அந்த நாயுடன்
நான் மட்டும்,
உன் வீடு பார்த்து......!

சனி, 16 ஆகஸ்ட், 2014

பஞ்சில் கனலின் பொறி.

வெந்து நீர்ந்தொரு
பிரசவம் முடிந்த களைப்பில்
குருதி தோய்ந்த மாலை
உன்னைப் பார்த்த பொழுதாயிருக்கும்!
எல்லோரும் புகழ்ந்து பேசும்
உன்னோடு
போட்டியிடுதற்கே ஆயிருந்ததென் புறப்பாடு!
உரிய ஆயுதங்களும், கவசங்களும்,
எடுத்து வைத்திருக்கிறேன்!

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

உயிர்ச்சிற்பம்




எந்தப் பறவையோ
இட்ட எச்சத்திலிருந்து,
மலையில் தெறித்த
விதையொன்று,
யாரும் காணாப் பெருவெளி விழுந்து
கண்திறக்கிறது!