மனம்கொண்டபுரம்
சனி, 16 ஆகஸ்ட், 2014
பஞ்சில் கனலின் பொறி.
வெந்து நீர்ந்தொரு
பிரசவம் முடிந்த களைப்பில்
குருதி தோய்ந்த மாலை
உன்னைப் பார்த்த பொழுதாயிருக்கும்!
எல்லோரும் புகழ்ந்து பேசும்
உன்னோடு
போட்டியிடுதற்கே ஆயிருந்ததென் புறப்பாடு!
உரிய ஆயுதங்களும், கவசங்களும்,
எடுத்து வைத்திருக்கிறேன்!
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
உயிர்ச்சிற்பம்
எந்தப் பறவையோ
இட்ட எச்சத்திலிருந்து,
மலையில் தெறித்த
விதையொன்று,
யாரும் காணாப் பெருவெளி விழுந்து
கண்திறக்கிறது!
‹
முகப்பு
வலையில் காட்டு