tag:blogger.com,1999:blog-6149455356302343862.comments2023-04-14T04:27:06.058-07:00மனம்கொண்டபுரம்ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-6149455356302343862.post-39169223146474672352017-05-07T10:38:06.210-07:002017-05-07T10:38:06.210-07:00முரணுக்கு மிகவும் கஷ்டப்பட்டு, பொருத்தமான விடை தேட...முரணுக்கு மிகவும் கஷ்டப்பட்டு, பொருத்தமான விடை தேடிவிட்டீர்கள். பாராட்டுகள்.<br />காளையை அடக்குவது இம்மூவருக்கும் அரிதான விஷயம்; உன் மனதுக்குப் பிடித்தவனே காளையை அடக்குவான் என்று தோழி தலைவியை ஆற்றுப்படுத்தும் விதமாகக் கூறியிருக்கலாம் என்ற உங்கள் யூகம், மிகப் பொருத்தமே.<br />உங்கள் உரை இல்லாவிட்டால், நச்சினாக்கினியரின் உரையைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமந்தான்.<br />வேளாண்மை செய்தன கண் என்பதற்கு நச்சினார்க்கினியரின் உரையைப் படித்து மிகவும் ரசித்தேன். மிகவும் நுட்பமான விஷயத்தை எடுத்துக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. நீங்கள் சொல்லும்வரை வேளாண்மை செய்தன கண் என்று பன்மையில் வந்திருப்பதை நான் கவனிக்கவே இல்லை. உங்கள் நுண்ணிய பார்வை கண்டு வியக்கிறேன்.<br />கைக்கிளை பற்றியறிந்து கொண்டேன். இப்பாடலில், அம்மூவரும் காளையை அடக்குவது அரிது; உன் மனங்கவர்ந்த தலைவன் என்றாவது ஒரு நாள் காளையை அடக்கி உன்னை மணம் செய்து கொள்வான் என்று தானே தோழி ஆறுதல் கூறுகின்றாள். பிறகு இதையேன் கைக்கிளை என்று ஏன் வகைப்படுத்துகிறார் நச்சினார்க்கினியர்? <br />ஏறுதழுவலில் தலைவன் ஈடுபட்டு வெற்றி வாகை சூடும் செய்தி இப்பாடலில் இல்லாததன் காரணமா? அல்லது தலைவிக்குப் பிடிக்காத வினைவல பாங்கினர், ஏறு தழுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதாலா?<br />வினைவல பாங்கினர் என்பதற்குத் தொல்காப்பியத்திலிருந்தும் பொருள் கொடுத்தமைக்கு நன்றி.<br />நச்சினார்க்கினியரின் உரைக்கு எனக்குப் புரியும் வகையில் உரை எழுதி, நுட்பங்களையும் எடுத்துக்காட்டி ரசிக்க வைத்தமைக்கு மிகவும் நன்றி சகோ. <br />உங்கள் தமிழ்ப்பணி என்றென்றும் தொடர வேண்டுகிறேன். <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-81009663924644452016-02-06T02:21:41.240-08:002016-02-06T02:21:41.240-08:00வணக்கம் ஐயா
எங்கே என் பின்னூட்டம்????
நன்றி,வணக்கம் ஐயா <br /><br />எங்கே என் பின்னூட்டம்????<br /><br />நன்றி,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-52464690274922108842016-02-06T02:16:25.631-08:002016-02-06T02:16:25.631-08:00வணக்கம் ஐயா,
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல, ஒர...வணக்கம் ஐயா,<br /><br />எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல, ஒரு காலத்தில் ஏன் செய்யுள் வரிகளுக்கு இந்த உரையாசிரியர்கள் சொன்னதைத் தான் படிக்கனமா? நாமே பொருள் சொல்லக் கூடாதா? கேள்வி கேட்டு, அது குறித்து என் ஒத்த அலைவரிசை உடைய தோழியருடன் வாதிட்டு, ஏன் பட்டிமன்றம் வைத்ததும் உண்டு. என் கல்லூரி காலங்களில் மிக பரப்பரப்பாக பேசப்பட்டது இவ்விடயம்,,, அதன் பிறகு நான் சந்தித்த பாதையில் தாங்கள் தான்,, நம் பார்வையும் பார்ப்போமே,,,<br />அது என்னமோ நாம் அவர்களை குறைசொல்வதாக நினைத்து வேண்டாம் என்று,,,<br />என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் போது இது போல் நிறைய அனுபவித்தேன்,, எனக்கும் இப்போ ஆசை,<br />அரும்பதவுரையாரையும் அடியார்க்குநல்லாரையும் எதிரில் நிறுத்தி ,,, ஐயா இது சரியா பாருங்கள் எனச் சொல்ல,,,<br /><br />ஆனால் பாழாய் போன தயக்கம் பயம் இப்ப புதுசா எனக்குள் எங்கிருந்து என்று தெரியல,<br />ஆனா ஒரு நம்பிக்கை, தாங்கள் சொல்வீர்கள் தானே சரி இல்ல தவறு என்று,, அது மட்டும் போதும்,,,,<br />தொடருங்கள் நல்ல எளிய நடையில் புரியும் விளக்கம், அனைவருக்கும் பயன்படும்,,,,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-22286314487297047892016-01-20T04:27:29.795-08:002016-01-20T04:27:29.795-08:00ஆகா! ஆகா! ஆகா! என்ன சொல்ல! ஏது சொல்ல!! சொல் எச்சம்...ஆகா! ஆகா! ஆகா! என்ன சொல்ல! ஏது சொல்ல!! சொல் எச்சம், இசை எச்சம், இருமடி ஆகு பெயர் இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் ஐயா கேள்வியே படுகிறேன். தமிழ் மீதான மதிப்பும் மலைப்பும் இன்னும் இன்னும் வானளாவுகின்றன! தங்கள் வலைப்பூவைப் பார்க்க நேர்ந்தது என் பேறு என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. கண்டிப்பாக இதையும் தாங்கள் மிகையாகவும், அன்பு காரணமான சொற்களாகவும்தாம் எடுத்துக் கொள்வீர்கள் என அறிவேன். ஆனால், என்னைப் பொறுத்த வரை இவை நூற்றுக்கு நூறு உண்மை!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-38801146041158278692016-01-15T10:43:38.762-08:002016-01-15T10:43:38.762-08:00அப்பப்பா! ஆய்வுப் பார்வையில் தான் எத்தனை விதம்? ...அப்பப்பா! ஆய்வுப் பார்வையில் தான் எத்தனை விதம்? ஒரு கண்ணியை எடுத்துக்கொண்டு பிறவற்றோடு ஒப்பு நோக்கியும், வேறுபடுத்தியும், கண்டவற்றைத் தொகுத்தும், கருத்துரைத்தும் போவதைத்தாம் உள்ளதன் நுணுக்கம் என்று நம் இலக்கணம் சொல்கிறது என்று வெகு அழகாய்ச் சொன்னீர்கள். மொழி ஆய்வுக்குத் தேவையான ஆர்வமும் உழைப்பும் உங்களிடம் அளவுக்கதிகமாகவே இருக்கின்றது சகோ!. <br />உங்கள் ஒவ்வொரு பதிவின் மூலமும் நான் கற்பது அதிகம். உங்கள் இந்த முயற்சியும், ஆர்வமும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே என் அவா. இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-47786178016683067392016-01-15T10:06:18.075-08:002016-01-15T10:06:18.075-08:00பொருள் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக நாம் பார்த்த மாட...பொருள் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக நாம் பார்த்த மாட்டு என்னும் முறைப்படி இதே பகுதியின் பாடலில் நச்சினார்க்கினியர் சொற்களை மாற்றிப் பொருள் கொண்ட சில இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எவை என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்!<br /><br />என் கண்ணில் பட்டவை இவை மட்டுமே:-<br /><br />1. தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்<br /><br /> தந்தையைக் கொன்றானைத் தாளின் கடந்து அட்டு<br /><br />2. செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை<br /><br /> செவி மறை மின்னும் நுண் பொறி நேர் வெள்ளை<br /><br /> <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-80508329177216755272016-01-15T08:27:15.598-08:002016-01-15T08:27:15.598-08:00வணக்கம் சகோ!
தங்களை இத்தளத்திற்கு வரவேற்கிறேன். உ...வணக்கம் சகோ!<br /><br />தங்களை இத்தளத்திற்கு வரவேற்கிறேன். உங்களின் ஆர்வமும் வாசிப்பும் வியப்பளிக்கிறது.<br /><br />மனம்கொண்டபுரம் என்பது, மனங்கொண்டபுரம் என்றே புணர்ச்சியில் அமையும். <br /><br />இந்தப்பெயரை நான் தேர்வு செய்த சூழல் வித்தியாசமானது. எனக்கு அப்பொழுது இப்படி வலைப்பூ என்று ஒன்று இருக்கிறது, அறிஞர்கள் எழுத்தாளர்கள் என இயங்கும் புலமொன்று இருக்கிறது என்பதெல்லாம் கொஞ்சமும் தெரியாது.<br /><br />ஆங்கிலத்தில் தளப்பெயரைத் தேர்ந்து அதற்கேற்பவே தமிழில் மனம்கொண்டபுரம் என்று அமைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது எனக்குத் தமிழ் தட்டச்சும் தெரியாது.<br /><br />புரிதல் எளிமைக்காகவும் அப்படியே தொடர்கிறேன். இருப்பினும் தாங்கள் சொன்னதே சரியான வடிவம்.<br /><br />“பொது வாசிப்பிற்குரியதன்று ” எனக் குறிப்பிட்டமைக்கான காரணத்தைத் திரு. ஞானப்பிரகாசம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.<br /><br />இனிவரும் பதிவுகளில் அவ்வாறு குறிப்பிடாமல் எழுதுகிறேன்.<br /><br />ஆய்தல் என்பதற்கு “ உள்ளதன் நுணுக்கம் ” என்று வரையறை கூறும் தொல்காப்பியம்.<br /><br />கோயில்களில் அமைந்துள்ள சிலைகளைக் காணாமலே கடந்துபோகும் பார்வை இருக்கிறது.<br /><br />அதன் அருகில் சென்று சற்று நின்று பார்த்துப் பின் கடக்கும் பார்வை இருக்கிறது.<br /><br />அச்சிலை அணிந்திருக்கும் அணிகலன்களில் கண்ணூன்றும் பார்வை இருக்கிறது.<br /><br />அதில் ஏதேனும் ஒரு குறிப்பிட அணிகலனை மட்டும் ஊன்றிப் பார்க்கும் பார்வை இருக்கிறது.<br /><br />அவ்வணிகலனில் உள்ள ஒரு இழையை அல்லது ஒரு கண்ணியில் பார்வையைப் பதித்தல் இருக்கிறது.<br /><br />அந்த ஒரு கண்ணியை/இழையை எடுத்துக் கொண்டு பிறவற்றுடன் ஒப்பு நோக்கியும் வேற்றுமை கண்டும், கண்டன தொகுத்தும், கருத்துரைத்தும் போவதைப் போன்றதைத்தான் “ உள்ளதன் நுணுக்கம் காணல் ” என்கிறது நம் இலக்கணம்.<br /><br />மொழியாய்வுக்கு இத்திறம் அதிகம் வேண்டப்பெறுவது.<br /><br />அதற்கு ஆர்வமும் உழைப்பும் இருக்க வேண்டும்.<br /><br />தங்களின் வருகையையும் தொடர்ந்த கருத்துகளையம் இத்தளத்தின் பதிவுகளுக்கு வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-74934186003873447152016-01-15T08:12:45.110-08:002016-01-15T08:12:45.110-08:00வணக்கம்.
உங்களின் வருகையும் தொடர்ச்சியும் அளிக்கி...வணக்கம்.<br /><br />உங்களின் வருகையும் தொடர்ச்சியும் அளிக்கின்ற ஊக்கமும் காணும்போது இன்னும் எழுதலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.<br /><br />தங்களின் வாழ்த்துகளோடு நிச்சயம் தொடர்கிறேன் அம்மை!<br /><br />நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-55007376535454727502016-01-15T08:07:51.124-08:002016-01-15T08:07:51.124-08:00வாருங்கள் அம்மா!
உங்கள் வருகையும் நீங்கள் காட்டும...வாருங்கள் அம்மா!<br /><br />உங்கள் வருகையும் நீங்கள் காட்டும் ஆர்வமும் பெரிது.<br /><br />தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-36814912611027839522016-01-15T07:46:31.204-08:002016-01-15T07:46:31.204-08:00ஐயா வணக்கம்.
ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப் படும...ஐயா வணக்கம்.<br /><br />ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப் படும் இக்கலித்தொகை சார்ந்த பதிவுகளைவிட இங்கு பதியும் பதிவுகளில் என் உழைப்பும் பாடுகளும் அதிகமாகவே இருக்கும். <br /><br />நான் பொதுவாசிப்பிற்கு உரியதன்று என்று எழுதியிருப்பதன் காரணம், அங்கு அதனைப் படித்தவர்களுக்கு மீண்டும் இங்குவந்து ஒரே பதிவைப் படிக்கிறோமே என்ற அலுப்பினை ஏற்படுத்தக் கூடாது என்பதனால்தான்.<br /><br />அன்றியும் பொதுவான வாசிப்பென்பது வேறு. பழந்தமிழ் இலக்கியங்களுக்கான மரபுரைகளை வாசிப்பதென்பது வேறு.<br /><br />பொழுதுபோக்கு வாசிப்பு என்பதைக் கடந்து, தமிழில் சற்றேனும் ஈடுபாடும் தேடலும் இல்லாதவர்களுக்கு இவ்விடுகைகளால் பயனிராது என்று நான் கருதியதாலேயே பதிவின் முகப்பில் அவ்வாறெழுதினேன்.<br /><br />“ எனக்கே புரிகிறதே ”<br /><br />என்று நீங்கள் சொல்வது உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லையா?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />இத்தளத்தைத் தொடரவுக் கருத்துரைக்கவும் வேண்டுகிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-17988495848264733472016-01-15T07:42:33.864-08:002016-01-15T07:42:33.864-08:00நச்சினார்க்கினியரின் உரைக்கண்ணாடியை ஒருபுறம் ஒதுக்...நச்சினார்க்கினியரின் உரைக்கண்ணாடியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நம் கண்களால் இந்தப் பாடலைப் பார்த்தால் எப்படி இருக்கும்? என்று நீங்கள் சொன்னபடி என் பார்வையில் பாடலின் முதல் பகுதி:-<br /><br />உயர்ந்த மரக்கொம்புகளில் இருக்கும் உலண்டின் நிறத்தை ஒத்த <br />வெளிறிய நிறத்தைக் கொண்ட எருதின் சிறுத்த கண்களின் பார்வையைக் கண்டு அஞ்சாமல் பாய்ந்த இடையனைக் கொம்பினால் சாகுமாறு குத்தி அவன் உடலைச் சின்னாபின்னமாகக் குலைக்கும் தோற்றத்தைக் காண்பாய்!<br />அழகான, சீராக அசைகின்ற இயல்பையுடைய துரோபதையின் மெல்லிய கூந்தலைப் பிடிக்கக் கைநீட்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து பகைவர் நடுவே தான் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய பீமனைப் போல இருக்கின்றது.<br />(அம்சீர் அசையியல் கூந்தல் என்பதற்கு எனக்குப் பொருள் தெரியவில்லை என்பதால் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன். உரையாசிரியர்கள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு என்னுடைய இந்த மனம் போனபடி பொருள் கொள்தல் ஓர் எடுத்துக்காட்டு)<br />அடுத்த பகுதிகளும் விரைவில்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-80943813142924330992016-01-15T07:38:19.163-08:002016-01-15T07:38:19.163-08:00வருக நண்பரே!
இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்....வருக நண்பரே!<br /><br />இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.<br /><br />ஞகரம் நகரத்தோடு உறழ்ந்தது உச்சரிப்பால் நேர்ந்ததுதான்.<br /><br />சில எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறையைத் தவறான உச்சரிப்புகளால் இழந்திருக்கிறோம்.<br /><br />பின்னர், அது எழுத்து மொழியிலும் நுழைகிறது.<br /><br />தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி !ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-44219018316383441622016-01-15T07:33:13.883-08:002016-01-15T07:33:13.883-08:00வாருங்கள் சகோ.
இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன...வாருங்கள் சகோ.<br /><br />இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.<br /><br />பதிவைப் படித்ததும் அல்லாமல் கருத்துமிட்டுப் பாராட்டி இருக்கின்ற தங்கட்கு என் மனம்நிறை நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-89766187587933432132016-01-12T18:01:22.253-08:002016-01-12T18:01:22.253-08:00என்ன ஒரு அழகான எளிய விளக்கம். தலையைச் சுற்றி மூக்க...என்ன ஒரு அழகான எளிய விளக்கம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல அந்நாளைய உரையாசிரியர்கள் எழுதியதை பழமை பாராட்டி அப்படியே கையாளாமல் எளிய முறையில் உரையைப் புரிந்துகொள்வதோடு எங்களுக்கும் இங்கே எடுத்துரைத்து விளக்கியிருப்பதற்கு மிகவும் நன்றி விஜி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-15413104288058387092016-01-12T07:10:21.257-08:002016-01-12T07:10:21.257-08:00வணக்கம் சகோ!
இன்று தான் முதன்முதலாக இத்தளத்துக்கு ...வணக்கம் சகோ!<br />இன்று தான் முதன்முதலாக இத்தளத்துக்கு வருகிறேன். மனம்கொண்டபுரம் என்பது மனங்கொண்டபுரம் என்றிருக்கவேண்டாமா? இது என் ஐயமே!<br />இதைப் பொறுமையாக ஆற அமர படிக்க வேண்டும் என்பதால் கால அவகாசம் கூடுதலாக எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக இத்தொடரும் மிக எளிமையாகப் புரியும் விதத்தில் தான் உள்ளது. நச்சினார்க்கினியரின் கடின உரையைக் கூட எங்களைப் போன்றோருக்குப் புரியும் விதமாக எழுதியிருக்கும் உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்! ஏனெனில் உங்களைப் போல நாங்கள் தலையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை!<br />எனவே இது பொது வாசிப்புக்குரியதன்று என்ற வரியை அருள் கூர்ந்து நீக்கிவிடக்கோருகிறேன். இது வாசிக்க வருபவர்களின் ஆர்வத்தைக் குறைப்பதாக உள்ளது. உரையாசிரியர்களின் உரையைப் புரிந்து கொள்ளவும் சொல்லாராய்ச்சியில் ஈடுபட விரும்புவோர்க்கும் இத்தொடர் உதவி செய்யும் என்று சொன்னால் போதும். ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் தானே தொடரப் போகிறார்கள்?<br />கலித்தொகை பாடல்கள் கூத்திற்கு உரியவை என்றறிந்தேன். கூத்து என்பதால் துறைக்குறிப்புகள் முன்பாக அமைய வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரி. கலித்தொகைக்குத் துறை வகுத்தவர் நச்சினார்க்கினியர் என்பதற்கு நீங்கள் சொல்லப்போகும் காரணங்களை அறிய ஆவல்.<br />தமிழில் முனைவர் பட்டம் பெற சமர்ப்பிக்கப் படும் ஆய்வுக்கட்டுரைகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும், உங்கள் ஆய்வு முடிவுகள்!<br />ஒரு முறை எனக்குத் தெரிந்தவர் ஒருவர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க இருந்தார். ஆர்வக்கோளாறில் நான் ஒரு முறை படித்துத் தருகிறேன் என்று அவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். ஏன் படித்தோம் என்றாகிவிட்டது. அவ்வளவு தரக்குறைவான கட்டுரை! அன்றிலிருந்து நம் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் பட்டத்தின் மீதே எனக்கு அவநம்பிக்கை வந்துவிட்டது! எல்லோரும் இப்படி எழுதுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது போன்ற கட்டுரைகளும் முனைவர் பட்டத்துக்கு ஏற்கப்படுகின்றன என்பது தான் என் அதிர்ச்சிக்குக் காரணம்!<br />தலைப்பெயல் எவ்வளவு அழகான பொருத்தமான சொல்!<br />அருமையான கட்டுரை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி சகோ! ஆர்வம் குறையாமல், உங்கள் இந்த முயற்சி தொடர வேண்டும்!<br />த ம வாக்கு.<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-67190955447704632952016-01-10T21:40:00.489-08:002016-01-10T21:40:00.489-08:00அப்பாடா ஒரு மாதிரி வாசித்து முடித்தேன். தாங்களே பே...அப்பாடா ஒரு மாதிரி வாசித்து முடித்தேன். தாங்களே பேரிடர்ப் பட்டு வாசித்தீர்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். இருந்தும் எத்தனை ஈடுபாடு இருந்திருந்தால் இதை எல்லாம் வாசித்து முடித்து இருப்பீர்கள் அம்மாடி எத்துணை ஆர்வம் . ம்..ம் நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ் கோஷமிட வேண்டும் போல் இருக்கிறது. ஹா ஹா .... <br /><br />நச்சினார்க்கினியரின் உரையே இவ்வளவு கடினம் என்றால் நாம் தான் என்ன செய்வது. ம்..ம் அவர் உரைக்கே உரை எழுதுவதும் கடினம் தான் இல்லையா அப்படி இருக்க. எமக்காக அதற்கு இலகுவாகப் புரியும் படி உரையும் எழுதி எம்மையும் இவற்றை ஈடுபாட்டுடன் ஈடுபட வைப்பதும் அரும் செயலே. <br />தங்கள் மற்றைய தளத்தில் போதிய விளக்கங்கள் அளித்து இலகுவாகப் புரிய வைத்தமையாலும். அதை ஏற்கனவே பல தடவை வாசித்து உள்வாங்கியமையாலும் இதுவும் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது. ஆகையால் நான் தொடர்கிறேன் இத் தளத்தையும். நன்றி ! எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பதிவுக்கு மிக்க நன்றி தொடர வாழத்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-32947417705994649902016-01-09T18:55:59.277-08:002016-01-09T18:55:59.277-08:00ஆஹா இதுவும் நல்ல முயற்சியே, அடுத்த கட்ட வாசிப்பிற்...ஆஹா இதுவும் நல்ல முயற்சியே, அடுத்த கட்ட வாசிப்பிற்காக இதுவா ம்..ம் நல்லது. பார்க்கலாம், நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் புரிகிறதா என்று. <br />ஹா ஹா...... என்ன சிரிப்பு இந்த மரமண்டைக்கு எங்கே ஏறப் போகிறது என்று தானே.ம்..ம் எதற்கும் இருங்கள் மற்றைய பதிவை பார்த்து விட்டு வருகிறேன். ok வா. <br /><br />இத்தளமும் சிறந்து விளங்க என் வாழத்துக்கள் ..! தொடருங்கள் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-4337079056053754132016-01-09T05:29:18.849-08:002016-01-09T05:29:18.849-08:00ஆகா! புதுமையான முயற்சி ஐயா! இதுவரை, இருவேறு வகையான...ஆகா! புதுமையான முயற்சி ஐயா! இதுவரை, இருவேறு வகையான பதிவுகளுக்காகத் தனித் தனி வலைப்பூக்கள் நடத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பதிவுகள் பரவ வேண்டும் என்பதற்காக ஒரே வலைப்பூவை இருவேறு வகைத் தளங்களில் (பிளாகர், வேர்டுபிரசு) பதிவு செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பொதுமக்களுக்காக ஒரு வலைப்பூவும் அடுத்த கட்ட வாசிப்பை விரும்புவோருக்காக ஒரு தனி வலைப்பூவும் நடத்துவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்! அதுவும் ஒரே விதயம் பற்றி, ஒரே தலைப்பில் இருவேறு பதிவுகள்! தூள்!<br /><br />பதிவு நன்றாக இருந்தது. ஆனால், பொது வாசிப்பிற்காக அன்று என நீங்கள் வகைப்படுத்தியிருந்தாலும் பொதுமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையானதாகவே அமைந்திருந்தது. எனக்கே புரிகிறதே!<br /><br />மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-30743777134039092872016-01-09T04:08:20.960-08:002016-01-09T04:08:20.960-08:00படித்தேன், அறிந்தேன் நண்பரே. இப்போதெல்லாம் ஞகரம் ...படித்தேன், அறிந்தேன் நண்பரே. இப்போதெல்லாம் ஞகரம் பயன்பாட்டில் மிக மிகக் குறைந்த அளவே உள்ளது. நண்டு கூட ஞண்டு என்று அறியப்பட்டது ஆச்சர்யம். தொடர்கிறேன்.<br />தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-58892179677026162202015-10-28T02:46:06.576-07:002015-10-28T02:46:06.576-07:00எங்கணுமாய்க் கண்காட்டும்
உன் மாய பிம்பங்கள்,....அ...எங்கணுமாய்க் கண்காட்டும் <br />உன் மாய பிம்பங்கள்,....அழகுSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-40620397144017033172015-05-29T08:10:00.727-07:002015-05-29T08:10:00.727-07:00எங்கே அந்த ஆறு எங்கே அந்த ஆறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-65406530326156722462015-05-29T08:09:41.047-07:002015-05-29T08:09:41.047-07:00எங்கே அந்த ஆறு... எங்கே அந்த ஆறு... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-88130543666350987632015-05-13T02:27:01.024-07:002015-05-13T02:27:01.024-07:00கவிக்கு வாழ்த்துக்கள்கவிக்கு வாழ்த்துக்கள்balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-35431986861299965352015-05-13T02:24:46.007-07:002015-05-13T02:24:46.007-07:00 இன்று வரை,
நீ விலகியும்,
உன் நினைவுகளோடுதான் இருக... இன்று வரை,<br />நீ விலகியும்,<br />உன் நினைவுகளோடுதான் இருக்கிறது ,<br />,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />என்னைப் போலவே!<br />உண்மை வரிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-67325529913825059072015-05-13T02:22:48.957-07:002015-05-13T02:22:48.957-07:00பெண்மையைக் குறித்த தங்கள் கவி அருமை. நன்றி.பெண்மையைக் குறித்த தங்கள் கவி அருமை. நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com