ஞாயிறு, 7 மே, 2017

ஆண்மையில்லாதவன் - பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் 1.3




இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட,ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3 என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் உரையின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

திங்கள், 11 ஜனவரி, 2016

உயிர்கள் உதிரும் களம்;பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் -1. 2. 1.


இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக்காட்சிகள் – 1. 2”. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் மொழியின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன. மரபுரைகளோடு பரிச்சயமும் பழந்தமிழ் இலக்கியங்களில் நுட்பமான பார்வையும் வேண்டுபவர்களுக்கான பதிவிது. எனவே பொது வாசிப்பிற்கு உகந்ததாய் இராது.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1.1


இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள்பகுதி – 1. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், சொல்லாராய்ச்சிகளும் இந்த வலைப்பூவில் இனித் தொடர்ந்து இடம் பெறும். இது பொது வாசிப்பிற்கு உரியதன்று. பழைய உரைகளைப் படிக்கப் பேரிடர் பட்ட என்னைப் போன்றோர்க்கு ஓரளவேனும் உதவும் பொருட்டே இதை  இங்குப் பதிந்து போகிறேன்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

மரணத்தின் புன்னகை.


சரிந்த
மரமொன்றைச்
சுமந்தபடி கிளைகள்
உங்கள் வாசலண்டை  வரும்!.
மல்லாந்து கிடந்து
துடிக்கின்ற அதன்
வேர்கள்
பற்றுமிடமில்லாது
பரபரக்கின்றன..!

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெடிப்பு றுங்கவிச் சூரியன்.






















கால முண்ட கண்மணிப் பூக்களின்
கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!

வியாழன், 4 செப்டம்பர், 2014

நீ இல்லா வீடு.....














நீ விட்டுவிட்டுப் போன
உன் கிராமத்துத் தெருமுனையில்,
அணைந்து எரிகின்ற
ஒற்றை விளக்கடியில்
குரைத்து,
பின் அடங்கிப்போன 
அந்த நாயுடன்
நான் மட்டும்,
உன் வீடு பார்த்து......!

சனி, 16 ஆகஸ்ட், 2014

பஞ்சில் கனலின் பொறி.

வெந்து நீர்ந்தொரு
பிரசவம் முடிந்த களைப்பில்
குருதி தோய்ந்த மாலை
உன்னைப் பார்த்த பொழுதாயிருக்கும்!
எல்லோரும் புகழ்ந்து பேசும்
உன்னோடு
போட்டியிடுதற்கே ஆயிருந்ததென் புறப்பாடு!
உரிய ஆயுதங்களும், கவசங்களும்,
எடுத்து வைத்திருக்கிறேன்!